Thangachi Chinna Ponnu |
---|
தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
ஹாஆஅஆஆ
ஹோஓஓஹோஓஹோய்
தேனோடும் பூ முகத்துச்
செவ்வாயில் பால் வழியத் தெளித்த காதல்
வண்டாடும் கள்ளவிழி மண் பார்க்க
முகம் பார்க்க மலர்ந்த காதல்
கைதட்டல்கள் :
பள்ளியிலும் கொள்ளாமல்
பாலும் சுவைக்காமல்
வெள்ளை மனம் தாளாமல்
விழியிரண்டும் மூடாமல்
பட்ட துயர் மேத்தமென்று
பருவமுகம் காட்டுதம்மா
கட்டழகு ஏங்குதம்மா
வட்ட முகம் வாடுதம்மா
ஹாஆஅஹோஓஹோஓஹோய்
திங்கள் மேனி மின்ன
உன் தங்கக் கால்கள் பின்ன
திங்கள் மேனி மின்ன
உன் தங்கக் கால்கள் பின்ன
தேரேறி வந்த மன்னன்
சொன்ன சேதி என்ன
தேரேறி வந்த மன்னன்
சொன்ன சேதி என்ன
இருவர் : பொன்னாலே மேடை போட்டுக்
கோலம் போடச் சொல்லவா
பொன்னாலே மேடை போட்டுக்
கோலம் போடச் சொல்லவா
பூவாலே மஞ்சம் வைத்துப்
பாடம் சொல்லச் சொல்லவா
பூவாலே மஞ்சம் வைத்துப்
பாடம் சொல்லச் சொல்லவா
தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
ஹாஆஅஆஅ
ஹோஓஓஹோ
ஓஹோஓஓஒ
சிற்றாடை மேல் ஒதுக்கிச்
செம்பஞ்சுக் காலெடுத்துச்
சிரிப்புக் காட்டிஈ
குற்றாலத் தருவியெனக்
குளிர்ந்த முக வெண்ணிலவில்
திலகம் தீட்டிஈ
சங்குக் கழுத்தினிலே
தங்க நகை குலுங்க
மங்கை நடந்து வர
மானெல்லாம் தொடர்ந்து வர
கொட்டுங்கள் மேளமெனக்
குரலொன்று கேட்டதம்மா
கொஞ்சு மயில் பிஞ்சு மனம்
குளிராய்க் குளிர்ந்ததம்மா
ஹாஆஅஆஆ
ஹோஓஓஹோஓஹோய்
மன்னன் வந்தான் மெல்ல
பூமாலை சூட்டிக் கொள்ள
மன்னன் வந்தான் மெல்ல
பூமாலை சூட்டிக் கொள்ள
பால் வண்ணப் பெண்ணைக் கண்டு
காதல் தேனை அள்ள
பால் வண்ணப் பெண்ணைக் கண்டு
காதல் தேனை அள்ள
இருவர் : உல்லாசப் பாடம் சொன்னான்
உள்ளம் துள்ளத் துள்ள
உல்லாசப் பாடம் சொன்னான்
உள்ளம் துள்ளத் துள்ள
பொல்லாத இரவும் கூடச் செல்லும்
மெல்ல மெல்ல
பொல்லாத இரவும் கூடச் செல்லும்
மெல்ல மெல்ல
அனைவரும் : தங்கச்சி சின்னப்பொண்ணு
தலை என்ன சாயுது
எண்ணங்கள் மெல்ல மெல்ல
எங்கெங்கே போகுது
என்னம்மா கண்ணுக்குள்ளே
எந்தக் கண்ணு பேசுது
கன்னத்தில் தென்றல் வந்து
என்ன சொல்லிப் பாடுது
ஹாஆஅஆஅ
ஹோஓஓஹோ
ஓஹோஓஓஒ