Thenpandi Cheemai |
---|
தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயேஏ
தாலட்டுப் பாட்டில்
தாய் உன்னைப் பார்த்தேன்
ஏழெழு ஜென்மம் எடுப்பேன்
ஹோ என் தாயைக் கண்டு ரசிப்பேன்
தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயேஏ
கண்ணுபடும் பிள்ளைக்கென்றே
காலடியில் மண்ணெடுப்பாள்
கால் முளைத்தே ஓடி விட்டால்
கண் விழித்தே தாய் துடிப்பாள்
பள்ளிக்கு போகாத பாவியவள்
உள்ளத்தில் நேர்மையில் யோகியவள்
சாமிக்கும் காணிக்கை போட்டு வைப்பாள்
தன் பிள்ளைக்கே வரம் கேட்டு வைப்பாள்
நான் வாழத்தானே
தான் வாழ்ந்த பேதை
ஆனாலும் மேதை அவள்தானோ
அன்பான அன்னை இவள்தான்
தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயேஏ
என் முகத்தில் தன் முகத்தை
ஏக்கத்துடன் பார்த்திருப்பாள்
பிள்ளைக்கொரு துன்பம் வந்தால்
உள் மனசில் வேர்த்திருப்பாள்
வைரத்தில் மூக்குத்தி கேட்டதில்லை
மானத்தில் தாய் என்றும் ஏழையில்லை
மார்மீதும் பிள்ளைக்கு ஏணி தந்தாள்
வானத்தை நான் தொட ஆசைப்பட்டாள்
பாசத்துக்காக ரோசத்தைக்
கூட பாராட்ட மாட்டாள்
அன்னை தான் ஹோ நான்
பார்த்த தெய்வம் இவள்தானோ
தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயேஏ
தாலட்டுப் பாட்டில்
தாய் உன்னைப் பார்த்தேன்
ஏழெழு ஜென்மம் எடுப்பேன்
ஹோ என் தாயைக் கண்டு ரசிப்பேன்
தென்பாண்டி சீமை
தமிழ் கொடுத்த தாயே
தெம்மாங்கு ராகம்
கலந்து கொடுத்தாயேஏ