Vaa Nila |
---|
உன்னை காணவே விழிகள் மூடினேன்
கனவின் வழியால்
உன்னை என் உடன் உளவு பார்ப்பது
நிலவின் தொழிலா
இது தானே முதல் நாள்
இளம் காதல் திருநாள்
இது தானே முதல் நாள்
இளம் காதல் திருநாள்
வா நிலா இன்று நீ உன் வானத்தை
விட்டு சென்றிடு தூரம்
கண் கொட்டும் மின்னலும் வேண்டாம்
இன்று என்றே சொல்லிடும் நேரம்
என் மேனி எங்கும்
மேகம் அலைபாயும்
ஓர் வெட்கம் கொண்டே
வானம் நிறம் மாறும்
வின் மீன்கள் வந்தே
வீட்டில் குடி ஏறும்
என் கூந்தல் பூக்களும்
கேலி செய்யுமே
வா நிலா இன்று நீ உன் வானத்தை
விட்டு சென்றிடு தூரம்
கண் கொட்டும் மின்னலும் வேண்டாம்
இன்று என்றே சொல்லிடும் நேரம்
புது ஓசையின் உருவம் பேசுதே
எதனால் எதனால்
பரிகாசமாய் பதுமை பாக்குதே
எதனால் எதனால்
இதழ் ஓரமாய் குளிரும் வேர்வையே
துடித்ததால் என்ன
தடையாகிடும் போர்வை கொஞ்சமாய்
உடைத்தால் என்ன
மெழுகாக கரைந்தேன்
உயிரோடு உறைந்தேன்
நமக்கான இள மாலை
இருள் வேளை வருகிறதே
மெதுவாகவே மெழுகு தீபம்
உருகும் உருகும்
இலை போலவே
இரவு நேரமும் உதிரும் உதிரும்
பரிமாறவும் பசிகள் ஆறவும் நேரம் எங்கே
இமை மூடினால் இரவு
போய் விடும் வா வா அன்பே
மழை சாரல் விழலாம்
அணை தாண்டி வரலாம்
நகராமல் நனைவோம்
நனைவோம் விடியும் வரை
வா நிலா இன்று நீ உன் வானத்தை
விட்டு சென்றிடு தூரம்
கண் கொட்டும் மின்னலும் வேண்டாம்
இன்று என்றே சொல்லிடும் நேரம்
என் மேனி எங்கும்
மேகம் அலைபாயும்
ஓர் வெட்கம் கொண்டே
வானம் நிறம் மாறும்
வின் மீன்கள் வந்தே
வீட்டில் குடி ஏறும்
என் கூந்தல் பூக்களும்
கேலி செய்யுமே