Vettaiyada Vaarum Mannava

Vettaiyada Vaarum Mannava Song Lyrics In English


வேட்டையாட வாரும் மன்னவா
வன வேட்டையாட வாரும் மன்னவா
கொடும் வேங்கைப் புலி யானை தன்னை
விரட்டியடித்துப் பிடித்து மகிழ
வேட்டையாட வாரும் மன்னவா

காட்டுப் பன்றிக் கூட்டம் தன்னைக்
கலைத்திடுவோம் சென்று
கரடி செந்நாய் மனிதக் குரங்கு
கதறிடக் கணை தொடுத்து நின்று
வேட்டையாட வாரும் மன்னவா

ஆகா அப்படியே ஆகட்டும் மந்திரி
அடே யாரங்கே

காவலா நீ சென்று
ஆவனச் செய்திட வேண்டும்
மக்கள் கஷ்டத்தை மகராஜன்
நான் தீர்க்க வேண்டும் காவலா
தாவியோடி வேட்டையாட விலங்க
தலை தப்பினேனென்று ஓடுமேயங்கு
தருணமிதே மிருக பயம்
தனையழிப்போம் மந்திரி
தாமதமேன் கானகம் செலத்தடுப்பவர்
யார் எந்திரி

ஆ பிராண நாதா
எங்கு செல்லுகின்றீர்
இப்போது வேகமாய்
எங்கு செல்லுகின்றீர்
சிங்காரவல்லிச் செந்தாமரையை
நீரும் விட்டு
எங்கு செல்லுகின்றீர்

துட்ட மிருகங்கள் கொட்டத்தையடக்கத்
துரிதமாய் வனம் செல்லுகின்றேன் எனை
விட்டு அந்தப்புரம் தொட்டு நடந்திடு
வேட்டையாடி வந்து கொஞ்சுகின்றேன்

பாவாய் நீ அந்தப்புரம் போவாய்

போகாதே போகாதே எந்தன் மன்னா
பிராண நாதா நேத்து
பொல்லாத சொப்பனங் கண்டேனே நான்
அய்யோ பொல்லாத சொப்பனங் கண்டேனே நான்
தேகம் நடுங்குது என் துரையே
எந்தன் மன்னா பெருந்தீங்கு
செய்வானிந்த மந்திரியே
அய்யோ தீங்கு செய்வானிந்த மந்திரியே

மாதே நீ சொல்வதை
நம்ப மாட்டேன் எந்தன்
மந்திரி பேச்சையும் தட்ட மாட்டேன்
மந்த மதி கொண்ட சுந்தராங்கி உன்னை
மாட்டி வைத்தே சிறை பூட்டிடுவேன்

அய்யோ சுவாமி காடுமலை
வன வனாந்திரங்களுக்கு
இந்த நன்றி கெட்ட மந்திரியோடு
தனியாகவா போகிறீர்கள்
வேண்டாம் நாதா வேண்டாம்

மந்திரிப் பேச்சைக் கேட்டு
மன்னவா காடு சென்றால்
தந்திரமாக உமைத் தாக்கியே
துரத்தி விட்டு
கேடு நீர் செய்ததாலே
கிடைத்தது சாவு என்று
தேடுவோர் தமக்குக் சொல்லி
தேசத்தைக் கைக் கொள்வானேஏஏஏ

வசனம் :

கதைய முழுதும் சொல்லணும்
டே மாமா டே புருஷா
டியாலிங்குற டியாசிங்கா
கண்டிப்பா நான் தெரிஞ்சுக்க வேணும்

தகடி புத்திக் கெட்ட போக்கிரிப் பெண்ணே
ஏ சிறுக்கி மேல்மினுக்கி
டியாலிங்குற டியாசிங்கி
போவாம் வாடி என்னோட பின்னே

ஏ அம்மே ஏ ஆயி நான் மாட்டேன்

நீ வாடி

நான் மாட்டேன்

டகுடி டிங்குடி
டாங்கு சுந்தரி
வாடி பின்னாலே

ஆத்தாடி டமுக்கு டிப்பா சிங்கா
கதையை சொல்லு முன்னாலே


டகுடி டிங்குடி
டாங்கு சுந்தரி
வாடி பின்னாலே

ஆத்தாடி டமுக்கு டிப்பா சிங்கா
கதையை சொல்லு முன்னாலே

திம்திம் தத்தினதிம் தினதின
தகதின திம் திம்திம்
அஃகூ அ அஃகூ அ அஃகூ அ அஃகூ

மக்களை ஏமாத்தி
மந்திரி நாடாளும்
மர்மத்தை நீ சொல்லு சிங்கா
அந்த மர்மத்தை நீ சொல்லு சிங்கா

அய்யோ மன்னன் தீங்கு செய்து
மாண்டானென்று சொல்லி
மந்திரியாளுறான் சிங்கி
நாட்டை மந்திரியாளுறான் சிங்கி

முக்காடு போட்டுக் கழுத்தறுக்கும்
அந்த மோசக்காரன் பேரை சொல்லு சிங்கா
மோசக்காரன் பேரை சொல்லு

அடியே முடியாது என்னாலே
பிடிவாதம் செய்யாதே
முட்டாளே நீ எட்டி நில்லு எட்டி நில்லு

அட சும்மா சொல்லு சிங்கா நான்
அங்கிட்டும் இங்கிட்டும் பாத்துக்குறேன்
ஆபத்து வராமே காத்துக்குறேன்

படமெடுத்து ஆடும் அந்த
பாம்புக்கென்ன பேரு

நாகம்

ம்வடமலையான் மருத வள்ளி
தெய்வயானை புருசன் நாம
வணங்கும் அப்பன் சாமிக்கென்ன பேரு

வேலன் ஓ

ஸ்

ஓ நாக வேலன் நாகவேலன் உர்ர்ர்ர்ர்

கத்தியினாலே காரியம்
சாதிக்க முடியாது
காரியம் முடியாது
இந்த கத்தியை நம்பி வெகு நாள் வாழ்ந்தவர்
கிடையாது உர்ர்ர்ர்ர்
சத்திய தர்ம நீதி நியாயமே இல்லாது
நீதி இல்லாது ஆளும்
சர்வாதிகார வெறியராட்சி இனி
செல்லாது உர்ர்ர்ர்ர்

ஒட்டாரம் பண்ணாதே
ஒங்க காலம் பொல்லாதே
ஊரு ஜனத்தைப் பகைச்சிகிட்டு
ஒடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே நல்ல
ஒடம்பைக் கெடுத்துக் கொள்ளாதே உர்ர்ர்ர்

இருவர் : கத்தியினாலே காரியம்
சாதிக்க முடியாது
காரியம் முடியாது
இந்த கத்தியை நம்பி வெகு நாள்
வாழ்ந்தவர் கிடையாது

இருவர் : கத்தியினாலே காரியம்
சாதிக்க முடியாது
காரியம் முடியாது
இந்த கத்தியை நம்பி வெகு நாள்
வாழ்ந்தவர் கிடையாது