Vindhaiyinum Periya Vindhaiyadi |
---|
விந்தையிலும் பெரிய விந்தையடி
இது விந்தையிலும் பெரிய விந்தையடி
சிந்திக்க முடியாத எங்குமே காணாத
சிந்திக்க முடியாத எங்குமே காணாத
விந்தையிலும் பெரிய விந்தையடி
செந்தமிழ் பண்பாட்டின் சிகரத்திலே
செந்தமிழ் பண்பாட்டின் சிகரத்திலே
சிறப்புடன் வாழும் இந்த குடும்பநிலை
சிறப்புடன் வாழும் இந்த குடும்பநிலை
விந்தையிலும் பெரிய விந்தையடி
பந்தபாசம் என்றால் படி என்ன விலையென்று
தந்தையைப் பிள்ளைக் கேட்கும் காலமன்றோ
பந்தபாசம் என்றால் படி என்ன விலையென்று
தந்தையைப் பிள்ளைக் கேட்கும் காலமன்றோ
இது தந்தையைப் பிள்ளைக் கேட்கும் காலமன்றோ
இதில் அன்புடன் பெற்றவரின் அறுபதாம் ஆண்டு விழா
அன்புடன் பெற்றவரின் அறுபதாம் ஆண்டு விழா
கொண்டாடும் குடும்பம் இதைப்போல் உண்டோ
விந்தையிலும் பெரிய விந்தையடி
வந்த மருமகளை நிந்தனை செய்வதையே
வாடிக்கையாய் கொண்ட உலகினிலே
வந்த மருமகளை நிந்தனை செய்வதையே
வாடிக்கையாய் கொண்ட உலகினிலே
மலர்ந்த முகங்காட்டி மருமகளை போற்றி
மலர்ந்த முகங்காட்டி மருமகளை போற்றி
மகள் அன்றி பிறர் என்னும் வகையினிலே
மகள் அன்றி பிறர் என்னும் வகையினிலே
பாராட்டி சீராட்டி பாராட்டி சீராட்டி
பழகிடும் மாமியும் பேறுகள் பதினாறும்
பெற்ற இந்தக் குடும்பம்
விந்தையிலும் பெரிய விந்தையடி
சிந்திக்க முடியாத எங்குமே காணாத
விந்தையிலும் பெரிய விந்தையடி