Yaaradi Nee |
---|
யாரடி நீ
நானாக
அடி காலம் கையில் வருமே
தானாக
போகும் வழி பூவாக
இனி காற்றில் மிதப்பேன் நானும்
நூலாக
யாரோவாக நினைத்தேன்
பூவே உனக்காய் கனிந்தேன்
தீவில் நடுவில் மரமாய்
நான் இருப்பேன்
ஓய்வாய் பறவை இருக்க
உறவாய் சிறகை விரிக்க
ஆழக்கடலில் படகாய்
இரவின் நிலவு நீ
புது புது
மலைகளை அள்ளி
மலைகளும் குளித்திடுமே
உறவின்றி வளர்கின்ற வேம்பில்
பனை வந்து முளைத்திடுமே
சுட சுட சூரியன் கண்டு
உலகமும் துளிர்த்திடுமே
நகர்கின்ற மேகங்கள் போலே
துயரங்கள் நகர்ந்திடுமே
ஓ ஓ
வானத்தின் தாரகை
வாசல் தேடி வந்ததே
வாதைகள் தூரமாய்
ஓடி போகுதே
அடி தாகங்கள்
தீர்ந்து நீ
சாய்ந்து கொள்ளும் வேளையில்
தூதனை போலவே வந்தேன்
தாங்கி கொள்ளவே
கண்ணுக்குள் அச்சங்கள்
நீங்கட்டுமே
காற்றினில் தென்றலும் நீந்தட்டுமே
நம்மோடு காலங்கள் சேரட்டுமே
ஒன்றோடு ஒன்றாக மாறட்டுமே
ஒரு வழி
திறக்கின்ற போது
மறு வழி அடைக்கின்றதேனோ
மறு வழி அடைக்கின்ற பொது
ஒரு வழி திறந்திடும் தானே
திறந்திடும்
யாரடி நீ
யாரடி நீ
யாரடி நீ
யாரடி நீ
நீ நீ நீ நீ நீநீ
புது புது
மலைகளை அள்ளி
மலைகளும் குளித்திடுமே
உறவின்றி வளர்கின்ற வேம்பில்
பனை வந்து முளைத்திடுமே
சுட சுட சூரியன் கண்டு
உலகமும் துளிர்த்திடுமே
நகர்கின்ற மேகங்கள் போலே
துயரங்கள் நகர்ந்திடுமே
யாரடி நீ