Yaarathu Manmadhan |
---|
பாடலாசிரியர் : கண்ணதாசன்
யாரது மன்மதன் ஏனிது மந்திரம் யாரது மன்மதன் ஏனிது மந்திரம்
அர்த்த ராத்திரியில் சரசமோ ஆசை கொள்வதென்ன விரசமோ அர்த்த ராத்திரியில் சரசமோ ஆசை கொள்வதென்ன விரசமோ
அன்பு மன்னவனின் உருவமோ அழகு தேவதையின் பருவமோ
யாரது மன்மதன் ஏனிது மந்திரம்
சிந்தித் திருந்தது சந்தித்தறிந்தது பந்திக்கு வந்தது முந்திக் கொடுத்தது சிந்தித் திருந்தது சந்தித்தறிந்தது பந்திக்கு வந்தது முந்திக் கொடுத்தது
மீனெனும் கண்களைக் கொடுத்தது மின்னலைப் போல் ஒன்று பிடித்தது ஏன் என கேட்கவும் மறந்தது காரணம் ஆனந்தம் தெரிந்தது
அர்த்த ராத்திரியில் சரசமோ ஆசை கொள்வதென்ன விரசமோ அன்பு மன்னவனின் உருவமோ அழகு தேவதையின் பருவமோ
யாரது ஹ்ம்ம் மன்மதன் ஆஹ் ஏனிது மந்திரம்
எண்ணிக் கிடந்தது வெற்றிக்கு வந்தது என்னைக் கவர்ந்தது இன்பத்தை தந்தது எண்ணிக் கிடந்தது வெற்றிக்கு வந்தது என்னைக் கவர்ந்தது இன்பத்தை தந்தது
இரவினில் அதிசயம் நிகழ்ந்தது கனவினில் உறவுடன் கலந்தது உலகினை ஒரு கணம் மறந்தது ஒளி மயமானது தெரிந்தது
அர்த்த ராத்திரியில் சரசமோ ஆசை கொள்வதென்ன விரசமோ அன்பு மன்னவனின் உருவமோ அழகு தேவதையின் பருவமோ
யாரது மன்மதன் ஏனிது மந்திரம்