Ammamma Thambi Endru Nambi |
|---|
அம்மம்மா
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்
அம்மம்மா
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தார்
அது உனக்காக வாழ்ந்த
உள்ளம் அல்லவோ
அம்மம்மா
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்
மலை போல வளமான
மனம் வேண்டும் உனக்கு
செய் நன்றி மறக்காத
குணம் வேண்டும் உனக்கு
தெய்வங்கள் உண்டென்று
நம்பிக்கை கொண்டு
சேவைகள் செய்தால்
உன் தேசம் செழிக்கும்
நீ பிறருக்காக வாழ்வது
இன்பம் அல்லவோ
பல கோடி உள்ளங்கள்
வாழ்கின்ற நாடு
பதினாலு மொழி பேசும்
அழகான வீடு
இன சண்டை மொழி சண்டை
கூடாது இங்கு
எல்லோரும் ஒரு தாயின்
மக்கள் அல்லவோ
நாம் எல்லோரும் இந்நாட்டு
மன்னர் அல்லவோ
அம்மம்மா
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்
தாய் என்றும் தந்தை என்றும்
தன்னை நினைத்தார்
அம்மம்மா
தம்பி என்று நம்பி
அவன் உன்னை வளர்த்தார்