Angum Ingum Engum |
|---|
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
அந்தோ உனது உலகில் நடக்கும்
அலங்கோலம் தன்னைப் பாராய்
அலங்கோலம் தன்னைப் பாராய்
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
வஞ்சகப் பேயின் ஆட்டம் கண்டும்
நெஞ்சம் பதறவும் இல்லையோஓ
நெஞ்சம் பதறவும் இல்லையோஓ
அஞ்சும் சத்திய தேவியின் கண்ணீர்
துடைத்திட மனம் வரவில்லையோஓ
சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு
சஞ்சல ஜகத்தைப் படைத்த உனக்கு
கொஞ்சமும் நாணமே இல்லையோ
கொஞ்சமும் நாணமே இல்லையோ
அங்கும் இங்கும் எங்கும் நிறைந்த
ஆண்டவனே நீ வாராய்
ஆண்டவனே நீ வாராய்
உண்மைக்கே திரை போடுது உலகம்
பொய்யே வெளியில் உலாவுது
உண்மைக்கே திரை போடுது உலகம்
பொய்யே வெளியில் உலாவுது
நன்மை அழிய தீமை வளர
சுயநலமே பூமியை ஆளுது
கொடுமை மிகுந்த உலகிதை அழிக்க
கோபமும் வரவே இல்லையோ
கோபமும் வரவே இல்லையோ
கோபமும் வரவே இல்லையோ
கோபமும் வரவே இல்லையோஓ