Azhagin Kaaladiyil Amaidhi |
---|
அழகின் காலடியில்
அமைதி காண வந்தேன்
அழகின் காலடியில்
அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே என்னை அங்கே
இன்பம் எங்கே என்னை அங்கே
அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
அழகின் காலடியில்
அமைதி காண வந்தேன்
ஒரு பொழுதேனும் துயரமில்லாத
உலகமொன்றிருந்தால் எனக்கது வேண்டும்
அஹ ஹா ஹாஆஅஆஆ
நினைவுகளாலே துடித்தவன் நெஞ்சை
மயங்கிட வைத்தால் நிம்மதி தோன்றும்
நிம்மதி தோன்றும் நிம்மதி தோன்றும
எந்தெந்த இடத்தில்
என்னென்ன சுகமோ
எந்தெந்த இடத்தில்
என்னென்ன சுகமோ
அந்தந்த இடத்தில்
அடைக்கலம் வேண்டுகின்றேன்
அழகின் காலடியில்
அமைதி காண வந்தேன்
இறைவனைக் கேட்டேன்
எனக்கொரு உறவை
கொடுத்தவன் கொடுத்தான்
வேறொரு துணையை
இறைவனைக் கேட்டேன்
எனக்கொரு உறவை
கொடுத்தவன் கொடுத்தான்
வேறொரு துணையை
மணவறைக் கோலம்
தனியறைப்பாடல்
மறந்திட வந்தேன் மனம் விரும்பாமல்
மனம் விரும்பாமல் மனம் விரும்பாமல்
ஊரென்ன பேச உறவென்ன சொல்ல
ஊரென்ன பேச உறவென்ன சொல்ல
ஒரு நெஞ்சம் இங்கே எரிகின்ற நேரத்திலே
அழகின் காலடியில்
அமைதி காண வந்தேன்
இன்பம் எங்கே என்னை அங்கே
அழைத்து செல்ல உங்கள் அருகில் வந்தேன்
அழகின் காலடியில்
அமைதி காண வந்தேன்