Ellam Alangolamo Ithuvum |
|---|
எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ
எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ
உள்ளம் வேதனையால் வெந்தே
உருகும் பேதையினைக் கண்டும்
ஊமையானதோ நீதி உறக்கம் கொண்டதோ
ஒரு கள்ளம் நினைந்தறியாத என்னை
கவலை மூடிடுமோ
மதி கலங்கும் என் வாழ்வு
கண்ணில் கரைந்துதான் விடுமோ
திரைகடலில் துரும்பெனவே
திண்டாடும் சோதனை ஏனோ
எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ
ஆசை செல்வங்களும் மனையும்
அழகு நாயகனும்
விந்தை பேசும் குழந்தைகளும்
தாயும் பிரிந்தே போனதுபோல்
இந்த வாசல் கோலங்களும்
கலந்து மறைந்து போனதுவோ
படு மோச உலகினிலே
நல்லோரின் முடிவும் இதுதானோ
திரைகடலில் துரும்பெனவே
திண்டாடும் சோதனை ஏனோ
எல்லாம் அலங்கோலமோ
இதுவும் என் காலமோ
துன்ப இருளும் மனத்துயரும்
இனி எந்த நாளில்தான் மாறுமோ