En Aatha Pon Aatha |
---|
என் ஆத்தா பொன்னாத்தா
என்னத்தான் விட்டு போனா
என்கிட்ட சொல்லாம எங்காத்தா
எங்க போனா
மூத்த மகன் மணமாலை இட்டு
பாத்திட காத்திருந்தா
காத்திருந்து பலன் இல்லை என்று
காத்துலதான் கலந்தா
என் ஆத்தா பொன்னாத்தா
என்னத்தான் விட்டு போனா
ஆரிரோஓஆரிரோ
ஆரிரோஓஆரிரோ
ஆராரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ
ஏத்தம் கொண்டு ஆத்தில் வந்த
தண்ணீரை இறைப்பேன்
எதை கொண்டு கண்ணில் வந்த
கண்ணீரை இறைப்பேன்
என்ன நினைச்சே அவ மூச்சு விட்டா
அந்த மூச்சின்று அடைங்கிருச்சே
கண்ணுமணியே என்று கூப்பிடுவா
அந்தா பேச்சின்று அடங்கிருச்சேஏ
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
என் ஆத்தா பொன்னாத்தா
என்னத்தான் விட்டு போனா
என்கிட்டே சொல்லாம எங்காத்தா
எங்க போனா
தாயை விட சொத்து சுகம்
வேர் ஏது எனக்கு
சொல்லி சொல்லி நான் அழுதா
தீராது கணக்கு
பெத்து வளத்து
நல்ல பேரும் வச்ச
தெய்வ பிறவியும் போனாலே
வாய்க்கரிசி இங்கு நான் இடவே
இன்று தீக்கிறை ஆனாலே
ஆரிரோ ஆரிரோ
ஆரிரோ ஆரிரோ
என் ஆத்தா பொன்னாத்தா
என்னத்தான் விட்டு போனா
என்கிட்டே சொல்லாம எங்காத்தா
எங்க போனா
மூத்த மகன் மணமாலை இட்டு
பாத்திட காத்திருந்தா
காத்திருந்து பலன் இல்லை என்று
காத்துலதான் கலந்தா
என் ஆத்தா பொன்னாத்தா
என்னத்தான் விட்டு போனா
ஆரிரோஓஆரிரோ
ஆரிரோஓஆரிரோ
ஆராரிரோ ஆராரிரோ
ஆரிரோ ஆரிரோ