En Manadhu Ondru Thaan |
---|
என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
பொன் மாலை சூடும் தாரம்
பூச்சூடும் காலம் சேரும்
பொன் மாலை சூடும் தாரம்
பூச்சூடும் காலம் சேரும்
தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்
தெய்வங்கள் சாட்சியாய் கல்யாணம் நிச்சயம்
என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
பொன் முத்து மாலையாவேன்
உன் மெத்தை மார்பில் சாய்வேன்
கை தொட்ட இடமெல்லாம் கனியுதே காவியம்
ஒரு கட்டுப் பூவைப் போலே
உடல் கட்டுக் கொண்ட பாவை
என் சொந்தம் ஆகிறாள் நடக்குதே நாடகம்
என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்
நான் மாலை நேரத் தோகை
நீ மாரிக் கால மேகம்
மேகங்கள் மாறினும் தோகைதான் மாறுமோ
இது தேவ லோக ராகம்
நம் ஆயுட்கால கீதம்
இருவர் : இது தேவ லோக ராகம்
நம் ஆயுட்கால கீதம்
பாவங்கள் மாறலாம் காதல்தான் மாறுமோ
என் மனது ஒன்றுதான்
உன் மீது ஞாபகம்
வான் நிலவு ஒன்றுதான்
வான் மீது சத்தியம்