En Ullam Enkindra Vanathile |
---|
என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது
ஒரு பூ மரத்தில் இரு தேன் கனிகள் பாசம் கொண்டாடுது பாதை ஒன்றானது
என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது
அன்பு எந்நாளும் தாயாகலாம் பிள்ளை இல்லாமலே அன்பு எந்நாளும் தாயாகலாம் பிள்ளை இல்லாமலே தங்கை உள்ளத்தை நான் கொள்ளலாம் அண்ணன் சொல்லாமலே
கண்கள் தாலாட்டினால் யாரும் உறவாகலாம் கைகள் உறவாடினால் கல்லும் சிலையாகலாம்
என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது
மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே மழலை நீ கண்டது மஞ்சள் கொண்டாடும் மாணிக்கமே மழலை நீ கண்டது மழலை நீ காணும் நேரத்திலே மாமன் நான் வந்தது
ஆறு ரெண்டாகலாம் மீண்டும் ஒன்றாகலாம் காலம் விளையாடலாம் மீண்டும் திசை மாறலாம்
என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது
மேலை வானத்து மேகங்களே பாலம் போடுங்களேன் கடலின் கீழ் உள்ள முத்துக்களே கரையில் வாருங்களே
யாரும் இடம் மாறலாம் தாய்மை இனம் மாறுமோ தாய்மை இனம் மாறினால் அன்பு மனம் மாறுமோ
இருவர் : என் உள்ளம் என்கின்ற வானத்திலே பொன் மேகம் தவழ்கின்றது ஓர் உண்மை இப்போது தெரிகின்றது புது உறவும் வருகின்றது