Engengu Nee Sendra Podhum

Engengu Nee Sendra Podhum Song Lyrics In English


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்

ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பூங்காற்று தாலாட்டும்
அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்

கண்களின் பார்வை அம்புகள் போலே
நெஞ்சினிலேபாய்வதும் ஏன்
அம்புகள் மீண்டும் பாய்ந்திடும் போது
காயங்களும் ஆறியதேன்

ஆறிடும் நெஞ்சம் தேறிடும் நேரம்
பிரிந்தது ஏனோ உன் உறவு
நெருங்கிடும் போதும் நீங்கிடும் போதும்
மயங்குவதேனோ என் மனது

இருநெஞ்சின் துன்பம்
இது காதல்தான்
அது போல இன்பம் எது கண்மணி
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னைத் தேடும்

ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பூங்காற்று தாலாட்டும்
அன்பே அன்பே


எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்

மாலை நன் நேரம்
மாறிட வேண்டாம்
மாங்குயிலே மாங்குயிலே
காலங்கள் கூட மாறிட வேண்டாம்
கண்மணியே கண்மணியே

சூரியன் மேற்கினில் சென்றிடட்டும்
சந்திரன் அங்கே வந்திடட்டும்
மேகங்கள் வானத்தில் நிலை பெறட்டும்
கடலினில் கூட அலை நிற்கட்டும்

உன்னோடு சேரும் ஒரு நேரமே
என்றென்றும் இங்கே நிலையாகட்டும்
பூங்காற்று தாலாட்டும் அன்பே அன்பே
எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்

ஆனந்த கீதம் ஆரம்பமாகும்
காலங்கள் யாவும் நம்மோடு பாடும்

பூங்காற்று தாலாட்டும்
அன்பே அன்பே

எங்கெங்கு நீ சென்ற போதும்
என் நெஞ்சமே உன்னை தேடும்

இருவர் : லாலா லா லா லா
லாலா லா லா லா