Ennenbatho Yethenbatho |
---|
பாடலாசிரியர் : வாலி
என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம்
என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம்
மஞ்சள் பூமாலை மாங்கல்யம் தந்து மங்கை தோளோடு தோள் சேர நின்று மஞ்சள் பூமாலை மாங்கல்யம் தந்து மங்கை தோளோடு தோள் சேர நின்று
மானம் மரியாதை காவல் கொண்டு வாழ்வான் உன் உள்ளம் கோயில் என்று அண்ணன் கடன் தீர்க்க வந்தான் தன்னை உனக்காக தந்தான்
என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம்
ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க ஏட்டில் அது போல நூறு தெய்வம் நூறில் இவனல்ல வேறு தெய்வம் கண்ணை இமைப் போலக் காப்பான் கேட்ட வரம் கொண்டு சேர்ப்பான்
என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம்
என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால் கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன் என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால் கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன்
நன்றி நான் சொல்ல வார்த்தை ஏது நாளும் நீயின்றி வாழ்க்கை ஏது அன்பில் அலை பாயும் நெஞ்சம் அண்ணன் திருப்பாதம் தஞ்சம்
என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம்