Indha Ulagil |
|---|
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு
அந்தக் காற்று கலைக்குமா
உந்தன் கனலும் எரிக்குமா
விளையாட்டுப் பொருளைப் போல்
இது விலைக்குக் கிடைக்குமா
நீ தட்டினால் திறக்குமா
என் உலக வாசலே
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு
தொடர்ந்த பாதைகள் துளியும் அறியாது
பயணம் போகின்ற உலகம்
தொடவும் முடியாது விடவும் முடியாது
மயங்கி நிற்கின்ற உலகம்
கனவை நிஜம் என்று கண்கள் திறவாது
களித்து மகிழ்கின்ற உலகம்
தனக்கும் புரியாது விளக்க விளங்காது
தயங்கி தவிக்கின்ற உலகம்
அருகில் இருந்தும்
மனித இதயம் தொலைவில் இருக்கும்
திசைகள் எங்கும் சிரிக்கும் முகங்கள்
சிரித்த போதும் ஜீவன் அதில் இல்லையே
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு
மலரின் வாசங்கள் சுமந்து செல்கின்ற
தென்றல் காற்றே நீ நில்லு
சுமந்த வாசத்தை கண்ட மலர் உந்தன்
சொந்தமா நீயும் சொல்லு
நிலவின் ஒளியோடு குதித்து விளையாடும்
வெள்ளி அலையே நீ நில்லு
அமுத ஒளி தந்த நிலவு உனக்கென்ன
சொந்தமா நீயும் சொல்லு
சிரித்து மலரும் மலர்கள் யாவும்
இறைவன் அடியை தொடுவதில்லை
இறைவன் அடிக்கு உதித்த மலரும்
கைக்கு கிடைக்காதய்யா
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு
அந்தக் காற்று கலைக்குமா
எந்தக் கனலும் எரிக்குமா
விளையாட்டுப் பொருளைப் போல்
இது விலைக்குக் கிடைக்குமா
நீ தட்டினால் திறக்குமா
என் உலக வாசலே
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு