Intha Pachai Kilikoru

Intha Pachai Kilikoru Song Lyrics In English


இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்

நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

எந்த குழந்தையும்
நல்ல குழந்தை தான்
மண்ணில் பிறக்கையிலே

பின் நல்லவராவதும்
தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே

நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

தூக்க மருந்தினை
போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள்

நோய் தீர்க்கும்
மருந்தினை போன்றவை

கற்றவர்
கூறும் அறிவுரைகள்

இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

அதில் பட்டு
துகிலுடன் அன்ன
சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்


ஆறு கரை
அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம்

தினம் நல்ல நெறி
கண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம்

நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட

பாதை தவறிய
கால்கள் விரும்பிய ஊர்
சென்று சேர்வதில்லை

நல்ல பண்பு தவறிய
பிள்ளையை பெற்றவர்
பேர் சொல்லி
வாழ்வதில்லை

இந்த பச்சைக்கிளிக்கொரு
செவ்வந்தி பூவில் தொட்டிலை
கட்டி வைத்தேன்

அதில் பட்டு துகிலுடன்
அன்ன சிறகினை மெல்லென
இட்டு வைத்தேன்

நான் ஆராரோ
என்று தாலாட்ட இன்னும்
ஆராரோ வந்து பாராட்ட