Kaasikku Pogum Sanyasi

Kaasikku Pogum Sanyasi Song Lyrics In English


காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி
கங்கைக்குப் போகும் பரதேசி
ஈஈஈஈஎஈஈ

கங்கைக்குப் போகும் பரதேசி
நீ நேத்து வரையிலும் சுகவாசி

காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

பட்டது போதும் பெண்ணாலே

பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே

பட்டது போதும் பெண்ணாலே
இதை பட்டினத்தாரும் சொன்னாரே
அவ சுட்டது போதும் ம்
சிவ சிவ சிவனே சிவ சிவ சிவனே
ஆஅஆஅஆஅஆஅஆஅஆஆஆஅ
சிவனே ஆஆஅஆஆ

சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே
சுட்டது போதும் சொல்லாலே
நான் சுகப்படவில்லை அவளாலே

காசிக்கு காசிக்கு
காசிக்குப் போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு

ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி

ஆதரவான வார்த்தையை பேசி
அருமை மிகுந்த மனைவியை நேசி
அன்பெனும் பாடத்தை அவளிடம் வாசி
அவளை விடவா உயர்ந்தது காசி

அவதி படுபவன் படு சம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி


அவதி படுபவன் படு சம்சாரி
அப்பா நீயோ பிரம்மச்சாரி
தலையணை மந்திரம் மூளையை கெடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்
தாரக மந்திரம் மோட்சத்தை கொடுக்கும்

காசிக்கு காசிக்கு
காசிக்குப் போறேன் ஆள விடு
என்னை இனிமேலாவது வாழ விடு

இல்லறம் என்பது நல்லறமாகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்

இல்லறம் என்பது நல்லறமாகும்
இதுவே வள்ளுவன் சொன்ன சொல்லாகும்
குடும்பத்தின் விளக்கு மனைவி என்றாகும்
கோபத்தை மறந்தால் சொர்க்கம் உண்டாகும்

பக்தியின் வடிவம் சன்யாசம்
புண்ணியவான்கள் சகவாசம்
அதுவே சந்தோஷம்

சக்தியின் வடிவம் சம்சாரம்
அவளே அன்பின் அவதாரம்
வேண்டாம் வெளி வேஷம்

காசி நாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குல தெய்வம்
காசி நாதனே என் தெய்வம்
கட்டிய மனைவி குல தெய்வம்

மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை
மனைவியும் தெய்வமும் ஒன்றில்லை
மனைவி இல்லாமல் தெய்வம் இல்லை

சரியோ இனி அவளுடன் இருப்பது சரியோ
அவள் துணையினை பிரிவது முறையோ
பகை தான் வளரும்
பகையே அன்பாய் மலரும்
பிரிந்தவர் இணைந்திடப் படுமோ
மணந்தவர் பிரிந்திடத் தகுமோ
இல்லறம் நல்லறமே

காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி

காசிக்குப் போகும் சந்நியாசி
உன் குடும்பம் என்னாகும் நீ யோசி