Kaatril Varum

Kaatril Varum Song Lyrics In English


காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா

அவன் வாய்
குழலில் அழகாக
ஆஆஆ ஆஆஆ அமுதம்
ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து

காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா

பசு அறியும் அந்த
சிசு அறியும் பாலை மறந்து
அந்த பாம்பறியும் பசு அறியும்
அந்த சிசு அறியும் பாலை மறந்து
அந்த பாம்பறியும்

வருந்தும் உயிர்க்கு
ஆஆ ஆஆ
வருந்தும் உயிர்க்கு
ஒரு மருந்தாகும் இசை
அருந்தும் முகம் மலரும்
அரும்பாகும் இசையின்
பயனே இறைவன் தானே

காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா

ஆதார சுருதி
அந்த அன்னை என்றேன்
அதுகேற்ற லயம்
எந்தன் தந்தை என்பேன்


சுதிலயங்கள் தன்னை
சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த
நல்ல இசை குடும்பம்

திறந்த கதவு என்றும்
மூடாது இங்கு சிறந்த இசை
விருந்து குறையாது இது போல்
இல்லம் எது சொல்லு தோழி

ப ம ரி க ரி
க ரி க நி த த நி
ப ம ரி க ரி
க ரி க நி த த நி

ஆண் & நி நி ரி க
ரி க ம த ம த ம த நி ச
நி நி ச நி நி ச சா சா நி
நி சா நி தா நி நி நி தா
ச நி தா ம தா தா தா நி
ம மா தா க க ம தா சா
நி தா ம க ரி

காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா
அவன் வாய்
குழலில் அழகாக
அமுதம் ததும்பும்
இசையாக
மலர்ந்தாய் நடந்தாய்
அலைபோல் மிதந்து

காற்றில் வரும்
கீதமே என் கண்ணனை
அறிவாயா