Kanna Neeyum |
|---|
கண்ணா
நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா
காலம் மாறினால்
கௌரவம் மாறுமா
நெவர்
நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா
அறிவை
கொடுத்ததோ
துரோணரின் கௌரவம்
அவர் மேல்
தொடுத்ததே அர்ஜுனன்
கௌரவம்
நடந்தது அந்த
நாள் முடிந்ததா
பாரதம்
நாளைய
பாரதம் யாரதன்
காரணம்
நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா
மூன்றடி மண்
கேட்டான் வாமனன்
உலகிலே
மூன்றென
வைத்ததோ மன்னவன்
தலையிலே
வளர்த்த என்
கண்ணனோ தந்தையின்
நெஞ்சிலே
மாறும் அவதாரமே
இதுதான் உலகிலே
நீயும் நானுமா
கண்ணா நீயும்
நானுமா
மன்னனின்
கௌரவம் சதுரங்க
நடுவிலே
மரிக்கின்ற
சேனையோ பிள்ளையின்
வடிவிலே
ஆகட்டும் பார்க்கலாம்
ஆட்டத்தின் முடிவிலே
அறுபதை இருபது வெல்லுமா
உலகிலே