Kannale Naan Kanda |
|---|
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
என்னோடு வாவென்று சொல்லுதே
எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து
என்னோடு வாவென்று சொல்லுதே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
யாரென்று கேட்காததேனோ
யாரானால் என்னென்று தானோ
யாரென்று கேட்காததேனோ
யாரானால் என்னென்று தானோ
நேராக நின்று யாரென்று கேட்டால்
கூரான வேல் பாயும் என்றோ
நேராக நின்று யாரென்று கேட்டால்
கூரான வேல் பாயும் என்றோ
யாரான போதென்ன கண்ணே
நான் உண்ணும் ஆனந்த தேனே
யாரான போதென்ன கண்ணே
நான் உண்ணும் ஆனந்த தேனே
நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல
நீ வேறு அல்ல நான் வேறு அல்ல
வேறென்ன நான் இன்னும் சொல்ல
இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே
இனி எந்நாளும் நீ இங்கு எனக்கே
என் இதயம் எல்லாம் உமக்கே
என் இதயம் எல்லாம் உமக்கே
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
இது முன்னாளில் உண்டாண உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ
இருவர் : கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே