Kannanal Naan Imaiyaven

Kannanal Naan Imaiyaven Song Lyrics In English


எப்பிறவி எடுத்தாலும்
எங்கே நீ சென்றாலும்
கை பிடியில் உன்னோடு காலம் எல்லாம்
நான் வருவேன்
காலம் எல்லாம் நான் வருவேன்

கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்

கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்

கண்ணானால் நான் இமையாவேன்ஏன்ஏன்

மொழியானால் பொருளாவேன்
முள்ளானால் மலராவேன்
நீ மொழியானால் பொருளாவேன்
முள்ளானால் மலராவேன்

கிளியானால் கனியாவேன்
கேள்வியென்றால் பதிலாவேன்
கிளியானால் கனியாவேன்
நீ கேள்வியென்றால் நான் பதிலாவேன்

கண்ணானால் நான் இமையாவேன்ஏன்ஏன்

கடலானால் நதியாவேன்
கணையானால் வில்லாவேன்
நீ கடலானால் நதியாவேன்
கணையானால் வில்லாவேன்


உடலானால் உயிராவேன்
ஒலியானால் இசையாவேன்
உடலானால் உயிராவேன்
ஒலியானால் இசையாவேன்
நீ ஒலியானால் நான் இசையாவேன்

கண்ணானால் நான் இமையாவேன்ஏன்ஏன்

உள்ளம் என்பது உள்ளவரை
உன் மனமே என் பள்ளியறை
உள்ளம் என்பது உள்ளவரை
உன் மனமே என் பள்ளியறை

கல்லில் வடித்த சொல் போலே
அது காலம் கடந்த இன்ப நிலை
கல்லில் வடித்த சொல் போலே
அது காலம் கடந்த இன்ப நிலை

கண்ணானால் நான் இமையாவேன்
காற்றானால் நான் கொடியாவேன்
மண்ணென்றால் நான் மரமாவேன்
மழையென்றால் நான் பயிராவேன்

இருவர் : கண்ணானால் நான் இமையாவேன்ஏன்ஏன்