Kumari Pennin Ullathile |
|---|
குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்
காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும்
குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்
காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும்
திங்கள் தங்கையாம்
தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
அவள் உன்னை
கண்டு உயிர் காதல்
கொண்டு தன் உள்ளம்
தன்னையே தருவாள்
நான் அள்ளிக்கொள்ள
அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே
புரியும்
கை தொடுவார்
தொடாமல் தூக்கம்
வருமோ துணையை
தேடி நீ வரலாம்
தொடுவார்
தொடாமல் தூக்கம்
வருமோ துணையை
தேடி நீ வரலாம்
குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
பூவை என்பதோர்
பூவை கண்டதும் தேவை
தேவை என்று வருவேன்
இடை மின்னல்
கேட்க நடை அன்னம்
கேட்க அதை உன்னை
கேட்டு நான் தருவேன்
கொடுத்தாலும்
என்ன எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு
குறையாது
அந்த அழகே
வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ
பெறலாம்
குமரிப்பெண்ணின்
உள்ளத்திலே குடியிருக்க
நான் வரவேண்டும்
குடியிருக்க
நான் வருவதென்றால்
வாடகை என்ன தர
வேண்டும்
குமரி பெண்ணின்
கைகளிலே காதல் நெஞ்சை
தரவேண்டும்
காதல் நெஞ்சை
தந்து விட்டு குடியிருக்க
நீ வரவேண்டும்