Maharajanodu |
---|
மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கல சௌபாக்யம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
கங்கைக்கொரு வங்கக் கடல்
போல் வந்தான் அவன் வந்தான்
மங்கைக்கொரு இன்பக் கனா
அவன் தந்தான் அவன் தந்தான்
கண்ணில் என்ன வண்ணங்கள்
சின்னச் சின்ன மின்னல்கள்
கண்ணில் என்ன வண்ணங்கள்
சின்னச் சின்ன மின்னல்கள்
ஓர் காதல் பூத்ததோ
தக்கத் துணை வாய்க்காமல்
பெண் வாடினாளோ
பக்கம் வந்து கை சேர பண் பாடினாளோ
ஒரு ராகம் ஒரு தாளம்
இணை கூடும் போது கானம்தான்
ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கல சௌபாக்யம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
மன்னன் தொட தன்னைத் தந்தாள்
பூம்பாவை பூம்பாவை
என்னென்னவோ நெஞ்சில் கொண்டாள்
பேராசை பேராசை
சந்திக்கின்ற சந்தர்ப்பம்
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
சந்திக்கின்ற சந்தர்ப்பம்
சின்னப் பெண்ணின் விண்ணப்பம்
நீ கேட்க வேண்டுமோ
இலக்கணம் பார்க்காது ஓர் பாடல் கூற
இடைவெளி தோன்றாது ஓர் ஜோடி சேர
என்ன வேகம் என்ன தாகம்
ஒரு காவல் தாண்டக் கூடுமோ
ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
இது மன்மத சாம்ராஜ்யம்
புது மங்கல சௌபாக்யம்
ஒரு போதும் குறையாது
தினம் கூடும் கூடும் ஆனந்தம்
இருவர் : ராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்
மகராஜனோடு ராணி வந்து சேரும்
இந்த ராஜ யோகம் காலம் தோறும் வாழும்