Maiyendhum Vizhiyodu |
|---|
மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
குழல் தந்த இசையாக
இசை தந்த குயிலாக
குயில் தந்த குரலாக நான் பாடுவேன்
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
உறவென்னும் விளக்காக
உயிர் என்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்
உறவென்னும் விளக்காக
உயிர் என்னும் சுடராக
ஒளி வீசும் உனக்காக நான் வாழுவேன்
விரல் கொஞ்சும் யாழாக
யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்
கைவிரல் கொஞ்சும் யாழாக
யாழ் கொஞ்சும் இசையாக
இசை கொஞ்சும் மனமாக நான் மாறுவேன்
இளங்காதல் வயதாலே
தனியாகினேன்
அந்த இளவேனில் நிலவாலே
கனியாகினேன்
இமை மூடி தூங்காமல்
போராடினேன்
உந்தன் இதழோடு இதழ் வைத்து
சீராடினேன்
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்
கொடிபோன்ற இடையாட
களைப்பாகினேன்
உன் மடிமீது தலை சாய்த்து
இளைப்பாறினேன்
அழகென்ற விருந்தொன்று
பரிமாறினேன்
அதை பரிமாறும் நேரத்தில் பசியாறினேன்
ஆஹாஹா
ஆஹாஹா
அஹஹஹா
இருவர் : ஓஹோஹஓஹோ
கண் மையேந்தும் விழியாட
மலரேந்தும் குழலாட
கையேந்தும் வளையாட நான் ஆடுவேன்