Manam Kanivaana Andha |
---|
மனம் கனிவான
அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்
அஹஹ ஆஹ ஆஹ ஆஹ
ஆஹாஹாஹ ஆஹஹாஹா
மனம் கனிவான
அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால்
முள்ளும் மலராகும்
ஆஹ முள்ளும் மலராகும்
ஆஹ கல்லும் கனியாகும்
பாதிக் கண்ணை மூடித் திறந்து
பார்க்கும் பார்வை காதல் விருந்து
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்பாதிக் கண்ணை மூடித் திறந்து
பார்க்கும் பார்வை காதல் விருந்து
ஜாதிக் கொடியில் பூத்த அரும்பு
சாறு கொண்ட காதல் கரும்பு
அன்னம் என்ற நடையினைக் கண்டு
மன்னர் தம்மை மறந்ததும் உண்டு
அன்னம் என்ற நடையினைக் கண்டு
மன்னர் தம்மை மறந்ததும் உண்டு
மனம் கனிவான
அந்தக் கன்னியைக் கண்டால்
கல்லும் கனியாகும்
முதல் முதலாக அவள் கைகள் விழுந்தால்
முள்ளும் மலராகும்
ஆஹ முள்ளும் மலராகும்
ஆஹ கல்லும் கனியாகும்
ஆஆஆஆஆஆஆஆ
ஆஆஆஆஆ
வாழைத் தோட்டம் போல இருந்தாள்
வண்டு போலப் பாடித் திரிந்தாள்
ஆஆஆஆஆஆஆஆ
ஆ வாழைத் தோட்டம் போல இருந்தாள்
வண்டு போலப் பாடித் திரிந்தாள்
தென்னம்பாளை போல சிரித்தாள்
சின்னக் கண்ணில் என்னை அடைத்தாள்
கன்னம் என்ற கனிகளின் மீது
இன்னும் நாணம் மோதுவதேனோ
கன்னம் என்ற கனிகளின் மீது
இன்னும் நாணம் மோதுவதேனோ
அவள் இவள் தானா இவள் அவள் தானா
அதைத் தெளிவாய் சொல்லலாமா
அவள் வரலாமா நலம் பெறலாமா
அவர் சம்மதம் தரலாமா
அவர் சம்மதம் தரலாமா
அதைத் தெளிவாய் சொல்லலாமா
வானம்பாடி போலப் பறந்தாள்
வாழ்வு தேடித் தேடி அலைந்தாள்
வானம்பாடி போலப் பறந்தாள்
வாழ்வு தேடித் தேடி அலைந்தாள்
காதல் தந்த கள்வனைக் கண்டாள்
தன்னைத் தந்த கையில் விழுந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
தஞ்சம் தஞ்சம் என்று மலர்ந்தாள்
நெஞ்சம் யாவும் அவனிடம் தந்தாள்
அவள் இவள்தானா இவள் அவள்தானா
அதைத் தெளிவாய் சொல்லலாமா
அவள் வரலாமா நலம் பெறலாமா
அவர் சம்மதம் தரலாமா
அவர் சம்மதம் தரலாமா
அதைத் தெளிவாய் சொல்லலாமா
இருவர் : ஆஹஹஹ ஹஹாஹா ஆஹஹஹ ஹஹாஹா
ஆஹஹஹ ஹஹாஹா