Mazhai Varum Neram |
---|
மழை வரும் நேரம்
உன்னை நினைத்தேன்
மழை நின்ற போதும்
மெல்ல நனைந்தேன்
இதயத்தின் அறை இன்று
திறக்கிறதே உன் காலடிச்சுவடுகள்
கேட்கிறதே
உயிருக்குள் உன் குரல்
ஒலிக்கிறதே
என் நிழல்லுக்கும் உன் முகம்
தெரிகிறதே
காற்று உள்ள காலம்
அதுவரைக்கும் காதல் இந்த
மண்ணில் நிலைத்திருக்கும்
மழை வரும் நேரம்
உன்னை நினைத்தேன்
மழை நின்ற போதும்
மெல்ல நனைந்தேன்
நினைவினில் நீதான்
நாள்தோறும் வருகிறாய்
கனவிலும் பெண்ணே
நீங்காமல் தொடர்கிறாய்
நெருக்கத்தில் என்னை
தீ மூட்ட வருகிறாய்
இருந்தும் ஏன் கொஞ்சம்
இடைவெளி நீ விடுகிறாய்
மனசுக்குள் தயக்கங்கள்
இருக்கிறதே ஏய் ய்
தயக்கத்தை மயக்கங்கள்
ஜெய்க்கிறதே ஏ
வார்த்தையில் மௌனங்கள்
வெல்கிறதே
மௌனமும் காதலை
சொல்கிறதே
ஆண் மற்றும்
வானமுள்ள காலம் அதுவரைக்கும்
காதல் இந்த மண்ணில்
நிலைத்திருக்கும்
மழை வரும் நேரம்
உன்னை நினைத்தேன்
ஒருமுறை என்னை நீ
பார்த்தால் கொதிக்குதே
மறுமுறை பெண்ணே நீ
பார்த்தால் குளிருதே ஹே
உன் மடி சாயும்
இந்நேரம் பிடிக்குதே
உன்னுடன் போகும்
பாதைதான் இனிக்குதே
தாயென வாழ்க்கையில்
வந்துவிட்டாய்
என் தனிமைக்கு தனிமைகள்
தந்துவிட்டாய்
உதிரத்தில் முழுதாய்
கலந்துவிட்டாய்
என் பெண்மையை பூவாய்
மலரவிட்டாய்
ஆண் மற்றும்
பூமியுள்ள காலம் அதுவரைக்கும்
காதல் இந்த மண்ணில்
நிலைத்திருக்கும்
மழை வரும் நேரம்
உன்னை நினைத்தேன்
மழை நின்ற போதும்
மெல்ல நனைந்தேன் ஹே