Mottu Virinthathu Mullai |
---|
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன்
ஆசை கொண்ட உள்ளம் தன் ஆவல் தன்னை சொல்லும் என் மன மாளிகை உன் வசம் ஆனது எடுத்தேன் நான் என்னை கொடுத்தேன்
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
அழகோவியம் ஒன்று நடமாடுது அது அலையாடும் நதியோரம் கதை பேசுது அழகோவியம் ஒன்று நடமாடுது அது அலையாடும் நதியோரம் கதை பேசுது
இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம் இளநெஞ்சில் அரங்கேறும் புது நாடகம் இது இடைவேளை இல்லாத தொடர் நாடகம்
மின்னலிடை ஆட இன்பம் தன்னை தேட மின்னலிடை ஆட இன்பம் தன்னை தேட இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன்
செவ்வானமே சிந்தும் மழையாகுமே உன் சிங்கார சிரிப்பெல்லாம் முத்தாகுமே
மதுவூறும் இதழோரம் நீ தேடி வா இந்த மாதுள்ளம் பூவாகும் நான் காணவா
எண்ணம் ஒன்று சேரும் கண்ணும் கண்ணும் மோதும் எண்ணம் ஒன்று சேரும் கண்ணும் கண்ணும் மோதும் இருவர் : எந்நாளும் சுகம் காணும் நமதுள்ளமே
மொட்டு விரிந்தது முல்லை மலர்ந்தது சிரித்தேன் கொஞ்சம் சிரித்தேன் இன்று ஒட்டுறவாடிட உன்னிடம் என்னை கொடுத்தேன் தேனையள்ளி சுவைத்தேன் ஆஆஆஅஆஅ