Mukkanigal |
---|
பொன் மகளே உன் பொறுமை
பூமிக்கே பொறுக்கல்லையோ
பூவிருந்தும் பொட்டிருந்தும்
மௌனம்தான் உன் நிலையோ
எங்கிருந்து உனக்கழைப்பு
எப்படித்தான் வந்து விடும்
எங்களிடமிருந்து உன்னை
எந்த தெய்வம் பிரித்து விடும்
முக்கனிகள் சேர்ந்திருக்க தட்டாக இருந்தாயே
மூன்று நதி கலந்திருக்க கடலாக அமைந்தாயே
தியாகத்தின் உச்சியிலே நீயொரு கலசமம்மா
தெய்வத்தின் வாசலிலே நீயொரு தீபமம்மா
நீயொரு தீபமம்மா
தரணியிலே பெண்களெல்லாம்
தாயாவதில்லையம்மா
தாயாகும் பெண்களெல்லாம்
நீயாவதில்லையம்மா
குடும்பம் என்னும் கோயில்கள்
ஆயிரம் ஆயிரம்
குலமகள் யாவரும் ஒவ்வொரு கோபுரம்
நாற்புறம் ஓங்கிய கோபுரங்கள்
நடுவில் தங்ககோபுரம்
நல்லவர்கள் மத்தியிலே நீ தங்க கோபுரம்
நீ தங்க கோபுரம்நீ தங்க கோபுரம்