Naan Paasamalar |
|---|
அறியாமல் நான் செய்த
ஒரு பாவமோ
அதற்காக நான் இன்று
படும் கோலமோ
தெரியாமல் புரியாமல்
தடுமாறினேன்
உன் திருவாசல் தனைத்தேடி
படி ஏறினேன்
நான் பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே
அந்த பாசமலர் இன்று
வாடி உதிர்ந்தது
ஏழு மலையானே
நான் ஏங்கும் படியானேன்
நான் பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே
நெல்லுக்குத்தான் என்று
நீரை இரைத்தேன்
புல்லுக்குச் சேந்ததையா
அது புல்லுக்குச் சேந்ததையா
அந்த நெல்லும் எனக்கில்லை
புல்லும் எனக்கில்லை
உண்மை புரிந்ததையா
இந்த உண்மை புரிந்ததையா
நெல்லுக்குத்தான் என்று
நீரை இரைத்தேன்
புல்லுக்குச் சேந்ததையா
அந்த நெல்லும் எனக்கில்லை
புல்லும் எனக்கில்லை
உண்மை புரிந்ததையா
நல்லவர்க்கென்றே
பெய்யும் மழையும்
இங்கு எல்லோர்க்கும்
உண்டல்லவா
இங்கு எல்லோர்க்கும்
உண்டல்லவா
இன்று எல்லோர்க்கும் பெய்கின்ற
அந்த மழையும்
ஏன் என்னைச் சேரவில்லை
அது ஏன் என்று தெரியவில்லை
பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே
அந்த பாசமலர் இன்று
வாடி உதிர்ந்தது
ஏழு மலையானே
நான் ஏங்கும் படியானேன்
வாசற்படியாய் என்னை நினைத்து
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
வெறும் மண்ணென
எந்தன் நெஞ்சை மிதித்து
வாட்டியது எத்தனை பேர்
என்னை வாட்டியதெத்தனை பேர்
வாசற்படியாய் என்னை நினைத்து
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
ஏறிச் சென்றவர் எத்தனை பேர்
வெறும் மண்ணென
எந்தன் நெஞ்சை மிதித்து
வாட்டியது எத்தனை பேர்
என்னை வாட்டியது எத்தனை பேர்
அச்சடித்த வெறும் காகிதம்
இங்கே ஆட்டிப்
படைக்குதையா எம்மை ஆட்டிப்
படைக்குதையா
அந்த காகிதம் கையில்
தீர்ந்த பின்னே
ஞானம் பிறக்குதையா
உன்னைச் சேர அழைக்குதையா
பாசமலர் ஒன்றை
பார்த்து வளர்த்தேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே
அந்த பாசமலர் இன்று
வாடி உதிர்ந்தது
ஏழு மலையானே
நான் ஏங்கும் படியானேன்
ஏழு மலையானே
திரு ஏழு மலையானே