Naan Sethu Pulachavanda |
---|
நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிச்சவன்டா
ஹாஹாஹாஹாஹா
நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிப்பவன்டா
வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச்சுட வெளுத்து
வளரும் ஜாதியடா வந்தால்
தெரியும் சேதியடா
நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிப்பவன்டா
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணாஅண்ணா
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால்
தோல்வி இல்லையடா
நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிப்பவன்டா
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது
பரம்பரை ரத்தம் உடம்பிலதான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பிலதான்
பரம்பரை ரத்தம் உடம்பிலதான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பிலதான்
கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா
காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா எதிர்த்தால்
வாலை நறுக்குமடா
நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிப்பவன்டா
நான் செத்துப் பொழச்சவன்டா
செத்துப் பொழச்சவன்டா
செத்துப் பொழச்சவன்டா