Neeyum Naanum Ondru |
|---|
இசை அமைப்பாளர் : கே வி மஹாதேவன்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
நீயும் நானும் ஒன்று
ஒரு நிலையில் பார்த்தால் இன்று
நீயும் நானும் ஒன்று
ஒரு நிலையில் பார்த்தால் இன்று
நீயும் நானும் ஒன்று
அழகை உனக்கு கொடுத்த இறைவன்
அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்
அழகை உனக்கு கொடுத்த இறைவன்
அறிவில் மயக்கம் கொடுத்து விட்டான்
விழியை எனக்கு கொடுத்த இறைவன்
வழியைக் காட்ட மறுத்து விட்டான்
விழியை எனக்கு கொடுத்த இறைவன்
வழியைக் காட்ட மறுத்து விட்டான்
நீயும் நானும் ஒன்று
ஒரு நிலையில் பார்த்தால் இன்று
நீயும் நானும் ஒன்று
எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம்
என்பதுனக்கும் தெரியவில்லை
எங்கு பிறந்தோம் எங்கு வளர்ந்தோம்
என்பதுனக்கும் தெரியவில்லை
எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம்
என்பதெனக்கும் புரியவில்லை
எதற்குப் பிறந்தோம் எதற்கு வளர்ந்தோம்
என்பதெனக்கும் புரியவில்லை
நீயும் நானும் ஒன்று
உறவுமில்லை பகையுமில்லை
உயர்வும் தாழ்வும் உனக்கில்லை
உறவுமில்லை பகையுமில்லை
உயர்வும் தாழ்வும் உனக்கில்லை
இரவுமில்லை பகலும் இல்லை
எதுவும் உலகில் எனக்கில்லை
நீயும் நானும் ஒன்று
ஒரு நிலையில் பார்த்தால் இன்று
நீயும் நானும் ஒன்று