Oaya Oaasai |
---|
ஓயா ஓசை ஒன்று
கேள்விகள் கேட்குதே
மனதின் மனதில்
கணமும் கனக்கிறதே
மீண்டும் மீண்டும்
மீண்டும்
கேள்விகள் அதே கேள்விகள்
உணர்வை உலவ உதிரம் உறையுதே
வழி காட்டி போன
உந்தன் வாழ்க்கையும்
விடை இன்றி தானே
உன் பின் நாங்களும்
உறவே உன் மனதில்
நீ ஏந்தியதை
நான் உணர முடியாதஆஆ
ஏனோ எங்கோ எங்கோ
தேடலை துவங்குவேன்
தடையும் தடையும்
என்றே புரிகிறதே
தேடி தேம்பி
தேய்ந்து பார்க்கிறேன்
நான் பார்க்கிறேன்
விடையும் விடிய புதிரும் பிறக்குதே
வழி காட்டி போன
உந்தன் வாழ்க்கையும்
விடை இன்றி தானே
உன் பின் நாங்களும்
உறவே உன் மனதில்
நீ ஏந்தியதை
நான் உணர முடியாதஆஆ
ஓயா ஓசை ஒன்று
கேள்விகள் கேட்குதே
மனதின் மனதில்
கணமும் கனக்கிறதே
மீண்டும் மீண்டும்
மீண்டும்
கேள்விகள் அதே கேள்விகள்
உணர்வை உலவ உதிரம் உறையுதே