Oru Koyilin Iru Deepangal

Oru Koyilin Iru Deepangal Song Lyrics In English


ஒரு கோயிலின் இரு தீபங்கள்
இரு வேறு திசை பார்ப்பதென்ன
ஒரு பாடல்தான் நாம் பாடினோம்
இரு வேறு இசை கேட்பதென்ன

ஒரு கோயிலின் இரு தீபங்கள்
இரு வேறு திசை பார்ப்பதென்ன
ஒரு பாடல்தான் நாம் பாடினோம்
இரு வேறு இசை கேட்பதென்ன

பூவுடன் மஞ்சள்
நீ கொடுத்தாய்
புண்ணியன் உன்னால்
நான் ஒரு தாய்

பூவுடன் மஞ்சள்
நீ கொடுத்தாய்
புண்ணியன் உன்னால்
நான் ஒரு தாய்

நிலைத்து வாழும் காவியம்
நீயும் நானும்தான்
இருக்கும் பொருத்தம்
இடையேன் வருத்தம்


ஒரு கோயிலின் இரு தீபங்கள்
இரு வேறு திசை பார்ப்பதென்ன
ஒரு பாடல்தான் நாம் பாடினோம்
இரு வேறு இசை கேட்பதென்ன

காதலி ராதை ஒரு கரையில்
கண்ணனும் நின்றான்
மறு கரையில்

கரைகள் இரண்டை வகுத்தது
காலம் நேரம்தான்
சுமைகள் குறைந்தால்
சுகங்கள் வரலாம்

ஒரு கோயிலின் இரு தீபங்கள்
இரு வேறு திசை பார்ப்பதென்ன
ஒரு பாடல்தான் நாம் பாடினோம்
இரு வேறு இசை கேட்பதென்ன