Oru Naalil

Oru Naalil Song Lyrics In English


ஒரு நாளில் வாழ்க்கை இங்கே
எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்துவிட்டால்
துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர்
மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்பும்
பூமி இங்கு பூ பூக்கும்

ஹோ ஒவ் வோவ்
கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு
ஹோ ஒவ் வோவ்
ஒரு வாசல் தேடியே விளையாட்டு
ஹோ ஒவ் வோவ்
கண் திறந்து பார்த்தால் பல கூத்து
ஹோ ஒவ் வோவ்
கண் மூடிக்கொண்டால்

ஹோ ஹோ ஹோஓஓ
ஹோ ஹோ ஓஒ ஹோ ஹோ ஹோ

போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினிலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை

இருட்டினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகிவிடும்
நீ மட்டும்தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்

தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம்

ஹோ ஒவ் வோவ்
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே
ஹோ ஒவ் வோவ்
இங்கும் எதுவும் நிலையில்லை கரைகிறதே
ஹோ ஒவ் வோவ்
மனம் வெட்டவெளியிலே அலைகிறதே
ஹோ ஒவ் வோவ்
அந்த கடவுளை கண்டால்


ஹோ ஹோ ஹோஓஓ
யெஹ் எஹ்எஹ்எஹ்
லாரா ரர ராராராரி ரர

அது உனக்கு இது எனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு

உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்துக்கொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியில் அவனே முடிவு செய்வான்

பழிபோடும் உலகம் இங்கே
பலியான உயிர்கள் எங்கே
உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருப்போம்
நடப்பவை நாடகமென்று
நாமும் சேர்த்து நடித்திருப்போம்

ஹோ ஒவ் வோவ்ஓஓ
பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ
பல திருப்பம் தெரியும்
அதில் திரும்பிக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ
கதை முடியும் போக்கில் அதை
முடித்துக்கொள்வோம்
ஹோ ஒவ் வோவ்ஓஓ
மறுபிறவி வேண்டுமா

ஆஹ்ஹ
லாரா லாரா லாலல்ல லாரலா
லாரா லரலா யெஹ் ஹேய் யெஹ்
ஓஓஓஓஒஓஒஹோ ஓஒ
ஓஓஓஓஒஓஒவாவ் வாவு வாவ்
யெஹ் எஹ் எஹ்