Padithen Oru Paattu |
---|
படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா
ஆராதனம்ஆலிங்கனம் அமைதியான பொன்மாலை நேரம்
படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து
எழுதாத புதிய கீதை இவள்தானே உனது ராதை இலை ஓடிய இடை ஓடிய நடை பழக எழுதாத புதிய கீதை இவள்தானே உனது ராதை இலை ஓடிய இடை ஓடிய நடை பழக
கண்ணன் ரெண்டு கைகள் கொண்டு ஏந்தலாம் காதலென்னும் ஓடை மீது நீந்தலாம் அங்கம்தான் மிருதங்கம் அங்கங்கே பசுந்தங்கம் சிறு பூவும் காற்றும் விரசம் கலந்த சரசம் பயில
படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா
ஆராதனம்ஆலிங்கனம் அமைதியான பொன்மாலை நேரம்
படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து
உறவாட உருகும்போது திறவாத கதவும் ஏது ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள உறவாட உருகும்போது திறவாத கதவும் ஏது ஒரு கொடியும் இரு கனியும் மடி புரள
அள்ளி அள்ளி முன்னும் பின்னும் பார்க்கலாம் அந்தரங்க ஆசை தன்னை தீர்க்கலாம் நித்தம்தான் புது வெள்ளம் நீராடும் இரு உள்ளம் அதில் கோடி கோடி உணர்ச்சி அலைகள் உடலில் பரவ
படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து பூங்காற்றும் என் பாட்டும் தேன் அல்லவா
ஆராதனம்ஆலிங்கனம் அமைதியான பொன்மாலை நேரம்
படித்தேன் ஒரு பாட்டு பல நாள் உனைப் பார்த்து லல லா லல லாலா லல லா லல லாலா