Pallaakku Vaanga Ponen

Pallaakku Vaanga Ponen Song Lyrics In English


பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக

பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக

மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்
பெண்ணுக்குச் சூட
மல்லிகைப் பூ வாங்கி வந்தேன்
பெண்ணுக்குச் சூட
அதை மண் மீது போட்டு விட்டேன்
வெய்யிலில் வாட வெய்யிலில் வாட

பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக

மண மேடை போடச் சொன்னேன்
மங்கலம் இல்லை
மணமகளை காண வந்தேன்
குங்குமம் இல்லை

மண மேடை போடச் சொன்னேன்
மங்கலம் இல்லை
மணமகளை காண வந்தேன்
குங்குமம் இல்லை
காதலுக்கே வாழ்ந்திருந்தேன்
கற்பனை இல்லை
கல்யாணம் கொள்வது மட்டும்
என் வசமில்லை என் வசமில்லை


பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக

கண்ணாலே பெண்ணை அன்று
கண்டது பாவம்
கண்ட உடன் காதல் நெஞ்சில்
கொண்டது பாவம்

கண்ணாலே பெண்ணை அன்று
கண்டது பாவம்
கண்ட உடன் காதல் நெஞ்சில்
கொண்டது பாவம்
கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி
வந்தது பாவம்
வெறும் கூடாக பூமியில் இன்னும்
வாழ்வது பாவம் வாழ்வது பாவம்

பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக

பல்லாக்கு வாங்கப் போனேன்
ஊர்வலம் போக
நான் பாதியிலே திரும்பி வந்தேன்
தனி மரமாக