Pattu Onnu Paadattuma |
|---|
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
இன்று வந்த புது வசந்தம்
என்றும் தங்கும்
தென்றல் எங்கள் பாதைகளில் முல்லை தூவும்
குயில்களுக்கு தடைகள் போடும்
மனிதர் இங்கே யாரு
குரல் கொடுத்தால் நிலவின் முதுகில்
உரசும் நாளை பாரு
பயணங்கள் எங்கே என்று
பாட்டில் கூற முடியாது
இசை என்னும் கடலில் ஆழம்
எங்கே என்று தெரியாது
பாடுவதால் வாழுகிறோம் சோகமில்லையே
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
ஓஹோஓஓஹோ
ஓஹோ ஓ ஓ ஓ
ஏழை எங்கள் கூரை அது வானம் ஆகும்
இதயம்தானே எங்களது வாசல் ஆகும்
பாட்டுக்கென கூட்டில் சேர்ந்து
பறவை போல வாழ்ந்தோம்
பசி எடுத்தால் பாட்டை உண்டு
திசைகள் தேடி சேர்ந்தோம்
ஒரு தெய்வம் நேரில் வந்து
உறவை சொல்லி துணையாச்சு
உலகங்கள் இதுதான் என்று
கவிதை தந்து உயிராச்சு
வானங்களை பாட்டெடுத்து
வாகை சூடுவோம்
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா
பால் நிலவ கேட்டு
வார்த்தையிலே வளைக்கட்டுமா
வானவில்ல சேர்த்து
{ஓஓஓஓஓஓஓஓ}