Penne Maanthartham (Penmai Endra) |
|---|
பெண்ணே மாந்தர் தம்
பெருமைக்கு காரணமாம்
பெண்ணே தியாகத்தின் பேருருவாம்
பெண்ணே தியாகத்தின் பேருருவாம்
பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பு ஏது
உறவு ஏது ஊரிலே உறவு ஏது ஊரிலே
மண் படைத்து விண் படைத்து
மலர் படைத்து சலித்த பின்
பெண் படைத்து தன்னைத் தானே
உயர்த்திக் கொண்டான் பரம்பொருள்
பெண் படைத்து தன்னைத் தானே
உயர்த்திக் கொண்டான் பரம்பொருள்
பெற்ற தாயின் பெருமை சொல்ல
கற்ற வித்தை போதுமா
பேசும் தெய்வம் அன்னையைப் போல்
பெரிய தெய்வம் ஏதம்மா
பெரிய தெய்வம் ஏதம்மா
பெண்மை என்ற பிறவி இன்றேல்
பெருமை ஏது பாரிலே
உண்மை ஏது உழைப்பு ஏது
உறவு ஏது ஊரிலே உறவு ஏது ஊரிலே