Poongaatre Dhinamum (Female) |
---|
பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்
பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்
உன்னை சோடி சேர கூடாதா உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா நெடுங்கால ஆசை தீராதா மணக்கோலம் நாளை வாராதா தென்றலே வா என் வசம் என்றுமே நான் உன் வசம்
பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்
நீரில்லையேல் வேரும் இல்ல ஊரில்லையேல் தேரும் இல்ல உள்ளத நான் சொல்லுகிறேன் உன்ன விட்டு நானும் இல்ல
நெத்தியிலே பொட்டும் வச்சு உன் மனச தொட்டு வச்சேன் உன் பெயரச் சொல்லி சொல்லி கூந்தலிலே பூ முடிச்சேன்
பூவும் விட்டு காயும் விட்டு காதல் உருவாச்சு பூர்வ ஜென்ம பந்தம் இன்று பாசம் கொறைஞ்சாச்சு
இங்கு உன்னோட சேராத தேகம் இந்த மண்ணோடு மண்ணாகி போகும் இது வேறென்ன நான் செஞ்ச பாவம் இங்கு நான் மட்டும் வாழ்ந்தென்ன லாபம்
பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்
ஆஅஆஆஅஆஆ ஆஅஆஆஅஆஆ ஆஆஅஆஆ
ஓடி வந்து என்னைச் சேரு ஒத்தையிலே நின்னேன் பாரு கொஞ்சும் மொழி சொல்லும் கிளி கூண்டுக்கிளி ஆனதிங்கே
ஆசை வச்ச கன்னி உள்ளம் யாரிடத்தில் என்ன சொல்லும் என்னுடைய மன்னவனே என்னை விட்டு போனதெங்கே
நேற்று என்று நாளை என்று நாட்கள் கடந்தாச்சு சோறு தண்ணி ஏதுமின்றி நானும் கிடந்தாச்சு
இன்று கண்ணீரில் நின்றாடும் நான்தான் சுடும் தண்ணீரில் தள்ளாடும் மீன்தான் என்னை கைத் தூக்கி காப்பாற்ற வா வா நெஞ்சம் கல்லாக கூடாது தேவா
பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்
உன்னை சோடி சேர கூடாதா உயிர் காதல் ஊஞ்சல் ஆடாதா நெடுங்கால ஆசை தீராதா மணக்கோலம் நாளை வாராதா தென்றலே வா என் வசம் என்றுமே நான் உன் வசம்
பூங்காற்றே தினமும் தேடுறேன் போகாதே தனியா வாடுறேன்