Sandhana Poongkaatrae |
|---|
சந்தன பூங்காற்றே
சந்தன பூங்காற்றே என்
இளமையின் கனவினை
திமிர் என உரைத்தது யார்
என் சரிகம சிரிப்பினை
சிறையிட நெய்தது யார்
நான் எல்லை தாண்டி விட
வில்லை கூண்டுக்குள்ளும்
இல்லை
பூ போலே பிறந்து
நதி போல துள்ளி திரிந்து
தினம் தென்றல் போலே
வாழ்ந்தால் ஆனந்தம் ம்ம்ம்
தம் தம் தம் நா நா
நும் நா நா தம்த நம்த நா
நா நும் நா நா நும் தம் நம்
தம் நம் தம் நா நா நும்
எனக்கொரு ஆசை
உனக்கொரு ஆசை
உதடுக்குதடு புது புது
பாஷை குற்றம் என்றே
இதை சொல்வாரோ
மலைகள் வேறு
கரைகள் வேறு கூண்டுகள்
வேறு கூடுகள் வேறு ரெண்டும்
ஒன்றே என்று சொல்வாரோ
புரியும் வரை தான்
மனதின் மயக்கம் சரியா
தவறா என்று ஏங்காதே
தவறே ஒரு நாள்
சரியாய் தெரியும் வாழ்க்கை
இது தான் அலைபாயாதே
வாழ்க்கை என்னும்
உலகு அது மாறு பட்ட அழகு
பொன் வானின் அளவு என்
அந்தரங்க கனவு
சந்தன பூங்காற்றே
சந்தன பூங்காற்றே என்
இளமையின் கனவினை
திமிர் என உரைத்தது யார்
என் சரிகம சிரிப்பினை
சிறையிட நெய்தது யார்
பனி விழும் பார்வை
பரம்பரை நாணம் தணிந்திடும்
கோவம் திருமண ஆசை
பெண்ணில் எல்லாம் எதை
பார்த்தேனே
இலக்கணம் இல்ல
இலக்கியம் நானே
விழிகளுக்கெல்லாம்
அதிசயம் ஆனேன்
மௌனத்தின் நான்
இசை கேட்பேனே
உறவில் கலந்து
கருவை சுமந்து உயிரை
படைக்கும் பெண்கள்
தெய்வங்களே
பூஜைகளும் வேண்டாம்
சிறைகளும் வேண்டாம்
பெண்ணை பெண்ணாய்கொஞ்சம்
பாருங்களேன்
ஓர் நாளே இருக்கும்
சில பூவை வண்டு மணக்கும்
உள்ளங்கள் கலந்தால் இங்கு
வாழ்வில் அர்த்தம் இருக்கும்
சந்தன பூங்காற்றே
சந்தன பூங்காற்றே நான்
இயக்கிட வந்தது திரை பட
உலகத்திலே நான் எழுதிய
திரை கதை ஜெயித்தது
நிஜத்தினிலே ஒரு பொய்யில்
வெற்றி அடைந்தாலும் கண்ணில்
இல்லை தூக்கம்
என் பாதை சரியா
இது காலம் செய்த பிழையா
என் நெஞ்சம் எங்கும் ஏதோ
ஆதங்கம்