Thekkathi Pakkathu Kaathu |
---|
தெக்கத்தி பக்கத்து காத்து தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து தள்ளாட்டம் போடும்போது தெம்மாங்கு பாடும்போது அள்ளட்டா கிள்ளட்டா சேத்து
தெக்கத்தி பக்கத்து காத்து தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து தள்ளாட்டம் போடும்போது தெம்மாங்கு பாடும்போது அள்ளையா கிள்ளைய்யா சேத்து
நான் புடிச்ச மயிலே ஆஹாஹ் பூ முடிச்ச குயிலே ஆஹாஹ் வந்தாலென்ன செந்தாமர தண்ணீரிலே நீராட
நாள் முழுக்க எனக்கு ஆஹ் உன் நெனப்பு இருக்கு ஆஹாஹ் உன்னாலத்தான் ராத்தூக்கமே இல்லாமத்தான் நான் வாட
வண்ணக்கொடி எண்ணப்படி வந்திருக்கேன் கையைப் புடி மெல்லத் தொடு மெல்லத் தொடு ஆ மத்ததெல்லாம் சொல்லிக்கொடு நான் செங்கரும்பு வில்லெடுத்து அம்புகளை தொடுப்பேன்
தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து தள்ளாட்டம் போடும்போது தெம்மாங்கு பாடும்போது அள்ளட்டா கிள்ளட்டா சேத்து
மூங்கிலிலே பனிதான் ஆஹ்ஹா தூங்கும் சுகம் தனிதான் ஆஹ்ஹா புல்வெளியில் உன்னோடு நான் பள்ளிக் கொள்ள கூடாதா
பாய் விரிக்கும் பொழுது ஆஹ் பாட்டெடுத்து எழுது ஆஹாஹ் கண்ணாளந்தான் கண்ணாலத்தான் சின்னப் பொண்ணு வாடாதா
பங்குனியில் சித்திரையில் பந்தலுக்கு வந்திடுவேன் பந்தலுக்கு வந்தவுடன் ஆ பாக்கியெல்லாம் தந்திடுவேன் உன் நெத்தியிலே மத்தியிலே குங்குமத்த இடுவேன்
தெக்கத்தி ஆ தெக்கத்திபக்கத்து காத்து தொட்டுத்தான் மொட்டுத்தான் பூத்து தள்ளாட்டம் போடும்போது ஆஹ் தெம்மாங்கு பாடும்போது அள்ளையா கிள்ளைய்யா சேத்து அள்ளட்டா கிள்ளட்டா சேத்து
இருவர் :