Unnai Naan Parthathu |
|---|
உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
நான் உனக்காகவே பாடுவேன்
கண் உறங்காமலே பாடுவேன்
உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
அன்று ஒரு பாதி
முகம்தானே கண்டேன்
இன்று மறுபாதி
எதிர்பார்த்து நின்றேன்
கை வளையோசை கடல் பொங்கும்
அலையோசையோ
என செவியாற நான் கேட்க வரவில்லையோ
உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
கம்பன் மகனாக
நான் மாற வேண்டும்
கன்னித் தமிழால்
உன் எழில் கூற வேண்டும்
என் மகராணி மலர்மேனி
செம்மாங்கனி
என் மடிமீது குடியேறி முத்தாடவா
உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்
எங்குத் தொட்டாலும்
இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல்
நானிங்கு வந்தேன்
எங்குத் தொட்டாலும்
இனிக்கின்ற செந்தேன்
உன்னைத் தொடராமல்
நானிங்கு வந்தேன்
நான் மறந்தாலும்
மறவாத அழகல்லவா
நாம் பிரிந்தாலும்
பிரியாத உறவல்லவா
உன்னை நான் பார்த்தது
வெண்ணிலா வேளையில்
உன் வண்ணங்கள் கண்ணோடுதான்
உன் எண்ணங்கள் நெஞ்சோடுதான்