Vilambara Idaiveli

Vilambara Idaiveli Song Lyrics In English


ஒளி இல்லா உன்
மொழிகள் விடை தேடும்
என் விழிகள் இமைக்காத
நம் நொடிகள் கடிகார
தேன் துளிகள்

அடி வாராரா உன்
காதல் நீ சொல்லடி வாராத
நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி
அனுப்பாதடி கண் முன்னே
உந்தன் எண்ணம் கூறடி

விளம்பர இடைவெளி
மாலையில் உன் திருமுகம்
திறக்கின்ற வேளையில் என்
நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்

நான் உனதே அடி நீ
எனதா தெரியாமல் நானும்
தேய்கிறேன் இல்லை என்றே
சொன்னால் இன்றே என் மோக
பார்வை மூடுவேன்

காதல் பூவை நான்
ஏற்று கொண்டால் உன்
காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து
விட்டால் நம் கால் தடங்கள்
அவை திசை மாறுமே

இவளின் கனவோ
உள்ளே ஒளியும் இரவும்
பகலும் இதயம் வழியும்
வழியும் கனவு இதழை
அடையும் எந்த காட்சியில்
அது வார்த்தை ஆகிடும்


விளம்பர
இடைவெளி மாலையில்
மாலையில்
உன் திருமுகம்
திறக்கின்ற வேளையில்
வேளையில்
என் நிறமற்ற
இதயத்தில் வானவில்
வானவில்
அடி என்ன நிலை
உந்தன் மனதில்
உந்தன் மனதில்

நிலமெல்லாம் உன்
தடமே நிலவெல்லாம் உன்
படமே நிஜமெல்லாம் உன்
நிறமே நினைவெல்லாம்
உன் நியாமே ஹே

மதுரம் கொஞ்சும்
இளைஞன் நீயோ மதமே
இல்லா இறைவன் நீயோ
வயத்தை கடிக்கும் குழந்தை
நீயோ வரம்பு மீறலோ எனை
தொடரும் தூறலோ

நான் உனதே
அடி நீ எனதா
தெரியாமல்
நானும் தேய்கிறேன்
இல்லை என்றே
சொன்னால் இன்றே
என் மோக
பார்வை மூடுவேன்

நான் உனதே அடி
நீ எனதா தெரியாமல் நானும்
தேய்கிறேன் இல்லை என்றே
சொன்னால் இன்றே என் மோக
பார்வை மூடுவேன்