Aandavan Mugatha Parkkanum |
---|
ஆண்டவன் முகத்த பாக்கணும் நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும் ஆண்டவன் முகத்த பாக்கணும் நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஏன்டா சாமி என்ன படைச்ச என்னை படைக்கையிலே என்ன நினைச்ச ஏன்டா சாமி என்ன படைச்ச என்னை படைக்கையிலே என்ன நினைச்ச
பணம் இருந்தா இந்த உலகத்திலே பல கதை நடக்குதப்பா நீ படைக்கையிலே கொஞ்சம் நோட்டையும் கிழிச்சு படைச்சா உதவியப்பா
படித்தால் என்ன உழைத்தால் என்ன பணம்தான் வாழ்வின் எல்லையப்பா
ஆண்டவன் முகத்த பாக்கணும் நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
தர்மம் என்பது என்றோ ஒரு நாள் தற்கொலை புரிந்ததப்பா தலைவன் உடம்பும் நீதிக்கு பயந்து கோவிலில் மறைந்ததப்பா
அழுதால் என்ன தொழுதால் என்ன நடக்கும் கதைத்தான் நடக்குதப்பா
ஆண்டவன் முகத்த பாக்கணும் நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்
ஒவ்வொரு உயிருக்கும் இறைவன் தந்தது ஒரு ஜாண் வயிறல்லவா ஒரு ஜாண் வயிற்றுக்கு வழியில்லையென்றால் ஒரு முழம் கயிறல்லவா
வயிறும் வைத்து கயிறும் வைத்துப் படைத்தது உந்தன் தவறல்லவா
ஆண்டவன் முகத்த பாக்கணும் நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும் ஏன்டா சாமி என்ன படைச்ச என்னை படைக்கையிலே என்ன நினைச்ச
ஆண்டவன் முகத்த பாக்கணும் நான் அவனிடம் ஒன்னே ஒன்னு கேட்கணும்