En Anbe Anbe |
---|
என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்
உன் காதல் மாளிகை நான் அல்லவோஓ உன் ராக மாளிகை நான் அல்லவோஓ
என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்
பூம்பாவை மனம் சிம்மாசனம் மன்னனே இதழ்கள் பூந்தேன் தரும் பிருந்தாவனம் கண்ணனே உன் பிரேமாயணம் பாராயணம் செய்கிறேன் தினமும் காதல் கிளி கீதாஞ்சலி சொல்கிறேன்
காமாஸ்திரம் நீ போட ரோமாஞ்சனம் நான் காண சந்திரோதயம் நீயாக சொர்க்கலயம் நான் காண
கண்ணா உன் கை வண்ணம் காணாத வைபோகம் அன்பே உன் சிங்காரம் அழகான ஸ்ரீராகம் ஓஅன்பே அன்பே அன்பே வா
என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்
நீ வாராமலே பொழுதாயிரம் போனது அழகே பல ராத்திரி சிவராத்திரி ஆனது வா நான் பாடுவேன் நீலாம்பரி கீர்த்தனம் இரவில் தூங்காதது நீங்காதது பெண் மனம்
உன் மேல் ஒரு கண்ணாக உன்னோடு நான் ஒண்ணாக என்னாகுமோ என் பாடு ஏதாகுமோ பெண் பாடு
மெதுவாக தொட்டாலும் பதமாக பட்டாலும் புது மேனி நோகாதோ புண்ணாகிப் போகாதோ ஓஅன்பே அன்பே அன்பே வா
என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்
உன் காதல் மாளிகை நான் அல்லவோஓ உன் ராக மாளிகை நான் அல்லவோஓ
என் அன்பே அன்பே என் மனம் உன் வசம் நீ சொன்னால் போதும் சம்மதம் சம்மதம்