Idai Kai Irandil Aadum

Idai Kai Irandil Aadum Song Lyrics In English


இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே

விழி மூடும் போதும் பார்க்கும்
இதழ் தூங்கும் போதும் பேசும்
இடை சாயும் போது காதலின் சாரம் கூறுமே
ஆசை கீதம் பாடுமே

அந்தி நேரம் வந்தாலே
காதல் வேகம் உண்டாகும்
பெற்றத் தாயை கண்ட போதும்
நெஞ்சில் கோபம் உண்டாகும்

அந்தி நேரம் வந்தாலே
காதல் வேகம் உண்டாகும்
பெற்றத் தாயை கண்ட போதும்
நெஞ்சில் கோபம் உண்டாகும்

பிறர் பார்த்துவிட்டாலும்
பெண்மை நாணம் கொண்டாடும்
அதை பார்க்க பார்க்க
காளை நெஞ்சில் போதை உண்டாகும்
அதை பார்க்க பார்க்க
காளை நெஞ்சில் போதை உண்டாகும்

இடை கையிரெண்டில் ஆடும்
சிறு கண்ணிரெண்டும் மூடும்
உயிர் தன்னை நீங்கி ஆசையில் தாவி ஓடுதே
காதல் கீதம் பாடுமே


சிறு பிரிவுமில்லாமல்
இன்ப சிறகுகளாலே
ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம்
பறவைகள் போலே

சிறு பிரிவுமில்லாமல்
இன்ப சிறகுகளாலே
ஒரு முடிவுமின்றி பறந்து செல்வோம்
பறவைகள் போலே

ஒரு பேதமில்லாமல்
சேர்ந்த காதலினாலே
நாம் உறவுக் கொண்டு
உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே
நாம் உறவுக் கொண்டு
உயிர் கலந்தோம் ஒருவரைப் போலே

இருவர் : இனி காலம் எங்கள் காலம்
சுக வாழ்வு எங்கள் வாழ்வு
உயர் பூமியெல்லாம் காதலின் கீதையாகுமே
தென்றல் கீதம் பாடுமே
ஆஅஆஅஆஆஆ
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்