Ilamanathu Pala Kanavu |
---|
இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
சிறுவயது புது உறவு
அருகினிலே வருகிறதே
இந்த மனதிற்கும்
வயதிற்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும்
பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
சிறுவயது புது உறவு
அருகினிலே வருகிறதே
கொடியிடை
நாணத்தில் நெளிகிறதோ
கனிகளின் பாரத்தில் வளைகிறதோ
மனமொரு
மோகத்தில் விழுகிறதோ
மருவிடும் ஆசைகள் வருகிறதோ
விரல்பட்டு இளமொட்டு
விரியட்டுமே
வெட்கம் விலகட்டும் விலகட்டுமே
இருகையும் இருகையும்
இளநெஞ்சமும்
அன்பை எழுதட்டும் எழுதட்டுமே
புது மலரை முதன் முதலாய்
தொடுவதினால் சுடுகிறதோ
புது மலரை முதன் முதலாய்
தொடுவதினால் சுடுகிறதோ
இளமனது
பல கனவு
விழிகளிலே
வழிகிறதே
சிறுவயது
புது உறவு
அருகினிலே
வருகிறதே
இந்த மனதிற்கும்
வயதிற்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும்
பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இளமனது
பல கனவு
விழிகளிலே
வழிகிறதே
சிறுவயது
புது உறவு
அருகினிலே
வருகிறதே
அழகிய வாசல்கள்
திறந்திடுமோ
அதிலொரு ஆனந்தம் பிறந்திடுமோ
தலையணை வேதங்கள்
விளங்கிடுமோ
தொடங்கிய ராகங்கள் தொடர்ந்திடுமோ
இளமைக்குள் விளைகின்ற
எழில்வண்ணமே
இங்கு மலரட்டும் மலரட்டுமே
தனிமைக்குள் எரிகின்ற
துயர் வெள்ளமே
இன்று வடியட்டும் வடியட்டுமே
புது உலகம் அதிசயமாய்
விழிகளிலே தெரிகிறதோ
புது உலகம் அதிசயமாய்
விழிகளிலே விரிகிறது
இளமனது பல கனவு
விழிகளிலே வழிகிறதே
சிறுவயது புது உறவு
அருகினிலே வருகிறதே
இந்த மனதிற்கும்
வயதிற்கும் சுகமென்னவோ
இங்கு புரியட்டும் புரியட்டுமே
அது இரவுக்கும் பகலுக்கும்
பொதுவல்லவோ
இன்று தெரியட்டும் தெரியட்டுமே
இளமனது
பல கனவு
விழிகளிலே
வழிகிறதே
சிறுவயது
புது உறவு
அருகினிலே
வருகிறதே