Maanida Jenmam Meendum Vandhidumo |
|---|
மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்
உயர் மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்
உயர் மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோஓஓஓ
ஞான வைராக்யம்
ஞான வைராக்யம்
தவம் ஜீவகாருண்யம்
உண்மை ஞான வைராக்யம்
தவம் ஜீவகாருண்யம்
உண்மையான பக்தி பகுத்தறிவுடன்
இகபர சுகம் தரும் கருணையாம்
மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர்ஈஈ
கருவறையினுள் கிடந்து வெளியில்
வரும் துயர் நினைந்தாலும்
கருவறையினுள் கிடந்து வெளியில்
வரும் துயர் நினைந்தாலும்
குடல் கலங்குதே
இங்கெதிரில் மரணம்
எனும் வெம்புலியும் சீறுதே
கலங்குதே இங்கெதிரில் மரணம்
எனும் வெம்புலியும் சீறுதே
இருவினை வசமாம்
இவ்வுடலொரு நீர்க்குமிழி
இருவினை வசமாம்
இவ்வுடலொரு நீர்க்குமிழி
இதனிடை உயர்
நெறியடைய மெய்
இறைவன் அருளின் வேட்கை
இதனிடை உயர்
நெறியடைய மெய்
இறைவன் அருளின் வேட்கை
உடையராகி இடையறாத
திருவடி நினைவுடனே
உடையராகி இடையறாத
திருவடி நினைவுடனே
கடிமதில் பண்டரி புரமதை
ஒருமுறை கண்டு பணிந்து ப்ரபோ
பாண்டுரங்க ஜெய விட்டலை
என்று பணிந்திட
மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோ உலகீர் உயர்
மானிட ஜென்மம் மீண்டும்
வந்திடுமோஓஓஓ
